சிறந்த இயற்கை மருந்து தேங்காய்

தேங்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச்சத்து, நார்சத்து, கால்சியம் என உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவச் சத்துக்களும் உள்ளதாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காயை வெறும் வாயில் மென்று திண்பதினால் வாய் புண், எரிச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலின் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், தோலை மிருதுவாக்கவும் தேங்காய் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்து என கூறலாம். இது பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.

பெண்கள் கூந்தலுக்கு சிறந்த கண்டீஷ்னராகவும் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளிப்பதனால் தலைமுடி உதிர்வது குறைவதோடு மிருதுவாகவும், சருமம் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் வியாதிகளில் இருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் மிகவும் பயன் படுகின்றது.

Article By TamilFeed Media, Canada
2493 Visits

Share this article with your friends.

More Suggestions | Health