பித்த வெடிப்பை மறைத்து பாதத்தை பளபளப்பாக்குவோம்.

தோலின் தண்ணீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு காலில் வெடிப்புகள் ஏற்படுகிறது. இது பாத அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் கொடுக்கிறது.

பாதத்தில் போதுமான ஈரப்பசை இல்லாதபோது வறட்சியினால் வெடிப்புகள் ஏற்படுகின்றன. மற்றும் சுத்தமின்மை, முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இன்மையாலும் ஏற்படலாம். இதனை ‘ட்ரொமாட்டிக் ஃபிஷர்ஸ்’ ( traumatic fissures ) என்று குறிப்பிடுவோம்.

இதை நீக்கும் இலகுவான வழிகள் :

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசுதல். மற்றும் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தல். மற்றும் எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசுதல், இவற்றால் கால் வெடிப்பு மறைந்து பளபளப்பாகும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

இரவில் மிதமான சூடான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, நன்றாக தேய்த்து கழுவினால் கிருமிகள் இறக்கும். மற்றும் குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து கால் பாதங்களை தேய்த்து கழுவி பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

இரவில் தயிரை தொட்டு கால் வெடிப்புகளில் பூசி மறுநாள் தண்ணீரில் உப்பைப் சேர்த்து பாதங்களை கழுவுதல் தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மென்மை ஆகும்.
வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் கால் வெடிப்பு குணமாகும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவாக அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குணமாகும்.

Article By TamilFeed Media, Canada
4059 Visits

Share this article with your friends.

More Suggestions | Health