கிராம்பில் (Cloves) பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாம். இவை பல வலிகளைப் போக்குவதற்கு மிகச் சிறந்த நிவாரணி.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். இதிலுள்ள விறைக்கப் பண்ணும் பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விறைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. 

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. 

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். 

* முப்பது மில்லி லிட்டர் நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். 

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். 

* ஒரு கிராம்பை சூடு காட்டி அதை நல்லெண்ணெயில் இட்டு வலியுள்ள காதில் பூசினால் சுகம் கிடைக்கும். 

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். 

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைப்பாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. 

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும். 

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் வாசனைப்பொருள் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. 

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதியங்களை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. 

Article By TamilFeed Media, Canada
3371 Visits

Share this article with your friends.

More Suggestions | Health