கருவளையங்களை போக்க இவற்றை கடைபிடியுங்கள்

கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள்

அழகான முக தோற்றம் இருக்கும் பலருக்கு அதனை கெடுக்கும் விதமாக கண்களை சுற்றி கரு வளையங்கள் காணப்படுவதை நாம் காண்கின்றோம் .இவை முகத்தை மிகவும் சோர்வாக காட்டும்.இவ்வகையான கருவளையங்கள் கண்களை சுற்றி காணப்படுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இதற்கு கண்டிப்பாக ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் இவை


ஓய்வு

இரவில் அதிக நேரம் கண் விழித்து இருப்பது, அளவுக்கதிகமாக தொலைக்காட்ச்சி பார்ப்பது, நீண்டநேரம் புத்தகம் படிப்பது, கணினியில் அதிக நேரம் செலவிடுவது ,இரவு வேலை செய்ப்பவர்களுக்கு ஏற்படும் தூங்கும் நேரத்திலான குழப்பங்கள் என்பன கருவளையங்களுக்கான புறச்சூழல் காரணிகளாகும்.நாம் நன்றாக தூங்கி எழுந்து எமது முகத்தை பார்க்கும் போது அது கொஞ்சம் பொலிவுடன் இருப்பதை கான்போம்.உறங்கும் போதுதான் உறுப்புகள் ஓய்வெடுப்பதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.மேலே குறிப்பிட்ட புறசூழல் காரணிகளால் ரத்த ஓட்டம் தடைப்படும்.ரத்தக் குழாய்கள் சுருங்கும்.அதன் வெளிப்பாடு முடி உதிர்வாகவோ, கண்களுக்கடியிலான கரு வளையங்களாகவோ தெரியும்.

ஊட்டச்சத்து

விளம்பரங்களை பார்த்து நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் ஊட்டச்சத்து முழுமையாக நமக்கு கிடைப்பது இல்லை.மாறாக உடல் பருமன் அதிகரித்து வெவ்வேறு வகையான உடல் உபாதைகளுக்கு நாம் ஆளாகின்றோம்.காலை உணவாக நாம் எடுத்துக்கொள்ளும் ஓட்ஸ் மற்றும் கார்ன்பிளேக்ஸ் என்பனவற்றில் நமக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.மாறாக காபோஹைதரேட் அதிகரித்து உடல் பருமன் மற்றும் பல்வேறு உபாதைகள் நமக்கு வர வழிவகுக்கும்.எமது முந்தய சந்ததியினருக்கு இவ்வகை பிரச்சினைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுவகைகள் தாம்.எனவே முடிந்தளவு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உட்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும் 

 இனி வீட்டில் கிடைக்க கூடிய சில எளிய பொருட்களின் மூலம் இந்த கருவளையங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என பார்ப்போம் 

 உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கனிமம் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து.அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்

தேயிலை 
உபயோகித்த தேயிலை தூள்கள் அல்லது அது பொதி செய்யப்பட பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான தேயிலை சாற்றை எடுத்து குளிர்பதனப்பெட்டியில் வைக்கவும்.அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு. 

கார்போக அரிசி
கார்போக அரிசி மற்றும் கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும்.அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து,அப்படியே 3 மணி நேரம் வைக்கவும்.பிறகு வடிகட்டி.பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும்.உடனடியாக ஒரு படப்பிடிப்புக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை உடனடி பலன் தரும். 


சாமந்திப்பூ 
2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும்.24 மணி நேரம் அப்படியே ஊறட்டும்.பிறகு அந்தத் தண்ணீரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு,அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும்.இவை அதிக எண்ணெய் பசையை நீக்கும் வல்லமை கொண்டது.


தாமரை இதழ்கள் 
செந்நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும்.பிறகு குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொண்டு,கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி,1 மணி நேரம் கழித்துக் கழுவவும் இது கண்களுக்கு சிறந்த பலனை தரும்.

முள்ளங்கி சாறு 
முள்ளங்கிச் சாறு,கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து,5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். 

பாதாம் 
பாதாமை பொடி செய்து,அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதனாலும் கருவளையங்கள் மறையும். 


வெள்ளரிக்காய் 
வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன்,1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து,கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

மஞ்சள் தூள் 
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து,பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா 
புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

Article By TamilFeed Media, Canada
7494 Visits

Share this article with your friends.

More Suggestions | Health