அருகம்புல்லின் அற்புதங்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பது நல்லது. இதை குடித்து 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகளை உண்பது சிறந்தது.

அருகம்புல் சாறு தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல வியாதிகளை குணப்படுத்தி ஆரோக்கியம் பேணலாம். அருகம்புல் கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி கழுவ வேண்டும். தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். 

அருகம்புல் சாறு குடிப்பதனால்...... 

  • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  • சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  • நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • புற்று நோய்க்கு நல்ல மருந்து.
  • உடல் இளைக்க உதவும்
  • இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

 

Article By TamilFeed Media, Canada
2604 Visits

Share this article with your friends.

More Suggestions | Health