முன்னோர்கள் பயன்படுத்திய விசித்திர வைத்தியங்கள் 

நமது முன்னோர்கள் ஒன்றும்  முட்டாள்கள் அல்ல என்பதை காட்டும் வைத்திய முறைகள் 

நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு முடிந்தளவு முதலில் நாமே சுயமாக தீர்வு காணுவதை விரும்புவோம். அவ்வாறே பல வலிகள் மற்றும் குறைகளுக்கு எப்படியாவது கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே அதனை சரி செய்துவிட நினைப்பது நம் அனைவரினதும் நிலைப்பாடு ஆகும்.

நோய் மற்றும் வலிகள், அரிப்பு என பல்வகை உடல் உபாயங்கள் ஆரம்ப கட்டத்தில் நமது உடலில் பிரதி பலிக்க தொடங்கும் போது கை வைத்தியம் ஏதேனும் ஒரு வகையில் அதனை தீர்த்து வைக்க உதவிடும்.

இன்றைய காலத்தில் இணையத்தின் உதவியுடன் அனைவரும் உபாயம் தேடும் நிலைப்பாட்டை கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு தமக்கு தாமாகவே அனைத்து தேவைகளுக்குமான நிவாரணங்களை கண்டறிந்து தாமாகவே நிவர்த்தி செய்து கொள்ள எத்தனித்து கொள்வது அறியக்கூடியதாக உள்ளது. இது தவறானது அல்ல. ஆயினும் இவ்வாறு இணைய வழியில் உடல் உபாதைகளுக்கான மருத்துவ குறிப்புகள் மற்றும் நிவாரண வழிகள் என்பன எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அறிந்து அதன் பின்னர் அவற்றினை செய்து பார்த்தால் என்பது பல நம்மிடையே அண்ட விடாது.

அவ்வாறே ஆரம்ப காலத்தில் நமது முன்னோர்களும் சில அசாதாரண நோய்களுக்கு எளிய வகையில் உபாயங்களை வீட்டு பொருட்களை கொண்டு செய்து கொண்டதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது இன்றைய கால நவீன மருத்துவர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு, பின்பற்றப்பட்டு வருவது அறியக்கூடியதானது. இவ்வாறு நமது முன்னோர்கள் பின்பற்றிய சில விசித்திரமான எளிய மருத்துவ குறிப்புக்களை காணலாம்.

  • செரிமான பிரச்சனைகளுக்கு - பாதாமி (Apricot) பழங்கள் .

உங்களுக்கு வயிறு உப்பிக்கொண்டு செரிமானம் அடையாமலும், மலசிக்கலாகவும் இருக்கின்றதா? அப்படியானால் அருகில் உள்ள கடைக்கு சென்று உலர்ந்த பாதாமி கொட்டைகளை வாங்குங்கள். பாதாமி பழங்கள் பார்ப்பதற்கு பீச் பழங்களை போன்று காணப்படும். இது உலர்ந்த நிலையில் சில மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இதனை ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்பும் ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் உலர்ந்த பாதாமி பழங்களை உள்ள அதிகப்படியான டயட்டர் நார்ச்சத்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து உடனே விடுவிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

  • வாய் துர்நாற்றத்திற்கு வேப்பங்குச்சி.

இக்காலத்தில் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.இது பெரும்பாலும் குடலியக்க பிரச்சினைகளால் தோன்றுவது ஆகும். அதற்கென நாம் பல இரசாயன மருந்துகளையும், சுயிங்கங்களையும் எடுத்துக்கொள்கிறோம். ஆயினும் அவற்றால் நீண்ட உபாயங்கள் கிடைக்காது. மாறாக வேறுவிதமான உடல் பிரச்சினைகளைக் கொண்டுவரும்.

எமது முன்னோர்கள் இவ்வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டபோது அவர்களுக்கு உதவியது வேப்பங்குச்சிகள் ஆகும். தினமும் பற்களை வேப்பங்குச்சிகளை கொண்டு துலக்குவதன் மூலம் பற்களும் ஈறுகளும் வலுவடைந்து வாய் துர்நாற்ற பிரச்சினைகள் இருக்காது.

  • சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் ஓர் அற்புதமான பொருள். இந்த பேக்கிங் சோடா நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதோடு, சிறுநீரக பாதை தொற்றுக்களையும் தான் சரிசெய்ய உதவும். அதற்கு நீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து குடியுங்கள். இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, சிறுநீர்ப்பை சுத்தமாக இருக்கும். ஒருவேளை சிறுநீரக பாதை தொற்றுகள் தீவிரமாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

  • சிலந்திக்கடிக்கு உருளைக்கிழங்கு

உங்களை சிலந்தி கடித்துவிட்டதா? அச்சம் கொள்ள வேண்டாம். வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அந்த ஒன்றே போதும். உருளைக்கிழங்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சிலந்திக் கடியால் ஏற்படும் அரிப்பைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை துண்டாக்கி, சிலந்தி கடித்த இடத்தில் வைத்து துணியால் கட்டிக் கொள்ளுங்கள் அல்லது உருளைக்கிழங்கை சிலந்தி கடித்த இடத்தில் தேய்த்துவிடுங்கள். இதனால் நல்ல தீர்வு உடனே கிடைக்கும்.

  • ஹார்மோன் ஏற்றத்தாழ்விற்கு கருணைக்கிழங்கு.

கருணைக்கிழங்கில் சக்தி வாய்ந்த நோயெதிர்ப்பு திரவியங்கள் , விட்டமின் சி, விட்டமின் ஏ போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இவை பெண்கள் அடிக்கடி சந்திக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும். குறிப்பாக இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள், கருணைக்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் மனநிலை மாற்றங்களைத் தடுக்கலாம்.

  • கீழ்வாத (Arthritis) பிரச்சனைக்கு உலர் திராட்சை.

நம் முன்னோர்கள் ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீழ்வாத பிரச்சனைக்கு உலர் திராட்சையைப் பயன்படுத்தினார்கள். எனவே உங்களுக்கு இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை சாப்பிடுங்கள். அதுவும் இரவில் படுக்கும் முன் சிறிது உலர் திராட்சையை சிறிது ஜின்னில் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஜின்னுடன் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

  • தலைமுடி உதிர்வைத் தடுக்க நெட்டில் இலைகள்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கட்டத்தில் தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுவோம். இந்த பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட எண்ணெய்கள் மற்றும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது.

ஆனால் நம் முன்னோர்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்க நெட்டில் இலைகளைப் பயன்படுத்தினார்கள். இதில் தலைமுடியின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. தலைமுடி உதிர்வதைத் தடுக்க 4-5 நெட்டில் இலைகளை ஒரு கப்பில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, பின் அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

முக்கியமாக நெட்டில் இலைகளில் சிலிகா அதிகம் உள்ளது. அதிகளவு சிலிகா தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும். எனவே அளவாகவே பயன்படுத்துங்கள்.

  • பயணத்தின் போது வாந்திக்கு ஆலிவ்.

ஆலிவ் பழங்கள் மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதும் கூட. ஆலிவ் பழத்தில் உள்ள டேனின்கள், வாயில் அதிகளவு எச்சில் சுரப்பதைத் தடுத்து, வாந்தி வருவது போன்ற உணர்வைத் தடுக்கும். எனவே அடுத்த முறை வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தால், ஆலிவ் பழங்களை உங்கள் பையில் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் ஆலிவ் பழத்திற்கு பதிலாக எலுமிச்சையைப் பயன்படுத்துவார்கள்.

  • காது வலிக்கு எலுமிச்சை சாறு.

நம் அனைவருக்குமே எலுமிச்சையின் மருத்துவ குணங்களும், அதனால் கிடைக்கும் நன்மைகளும் தெரியும். ஆனால் எலுமிச்சை காது வலியை சரிசெய்யும் என்பது தெரியுமா? ஆம், நம் முன்னோர்கள் காது வலிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றினை காதுகளில் விடுவார்கள். அதனால் எலுமிச்சை pH அளவை நடுநிலையாக்கி, விரைவில் வலியில் இருந்து விடுவிக்கும். ஒருவேளை காது வலி தாங்க முடியாத அளவில் இருந்தால், அப்போது இம்மாதிரியான கை வைத்தியங்களை மேற்கொள்ளாமல், சற்றும் தாமதிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

  • பூண்டு நாற்றத்தைப் போக்குவதற்கு பார்லி. 

பூண்டு சாப்பிட்டால், வாய்வு பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்காது என்று சிலர் பூண்டு அதிகமாக சாப்பிடுவார்கள். பூண்டு சாப்பிட்டால், அது வாயில் இருந்து கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆனால் இந்த நாற்றத்தை பார்லி போக்கும். ஆகவே பூண்டு சாப்பிட்ட பின், சிறிது பார்லி வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பூண்டு நாற்றம் போவதோடு, வாய் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும்.

 

Article By TamilFeed Media, Canada
1527 Visits

Share this article with your friends.

More Suggestions | Health