கற்றுக்கொடுப்பவரெல்லாம்ஆசிரியர் அல்லர். யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
நான் மாறும்போது தானும் மாறும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம், அதுதான் என்னை மனிதனாக்கியது.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
நல்லவர்களோடு நட்பாயிரு,நீயும் நல்லவனாவாய்.
யார் சொல்வது சரி என்பதல்ல,எது சரி என்பதே முக்கியம்.
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
பயம் தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்.
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்பே பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.