கடைகளுக்கு வேகமாக செல்ல வேண்டும் என்றால், இடையில் வந்த குறுக்கு பாதையில் போகலாம் என்று யோசித்து அதன் பக்கம் வண்டியை திருப்பினான்.
அங்கு வந்த ஒரு வயோதிபரைக்கண்ட முட்டை வியாபாரி?
"தாத்தா, இந்த பக்கம் போனால் வேகமா ஊருக்குள் போகலாமா?" என்று கேட்டான் .
"போகலாம் தம்பி, ஆனால் மெதுவா போ !" என்று கூறிவிட்டு அந்த வயோதிபர் நகர்ந்தார்.
"இந்த கிழவனுக்கு பைத்தியமா? வேகமா போக வழி கேட்டா மெதுவா போக சொல்லிட்டு போறானே ?" என்று கடிந்து கொண்டு அந்த குறுக்கு வழியில் வண்டியை வேகமாக செலுத்திக்கொண்டு சென்றான் முட்டை வியாபாரி.
சிறிது தூரம் சென்றதும் அந்த சாலையின் முழுவதும் கற்கள் கொட்டி கிடந்தன,வேகமாக வண்டியை ஓட்டி சென்ற அந்த முட்டை வியாபாரி,தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழ,அவன் கொண்டுவந்த அனைத்து முட்டைகளும் விழுந்து உடைந்து போனது.
அப்போதுதான் தான் அந்த வயோதிபர் சொன்ன வார்த்தைகள் அந்த முட்டை வியாபாரிக்கு புரிந்தது.